செவ்வாய், 5 ஜூன், 2012


குர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)

'இவ்வுலகின் வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் மூலம் மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும்' என்பதற்காகவே குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை இறைவன் விவரித்து கூறும்போது... அவற்றை மேலும் உறுதிப் படுத்துவதற்கும், கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புகள் மீதே அல்லாஹ் சத்தியமிட்டு அவ்வசனங்களை கூறுவதை குர்ஆனில் பல இடங்களில் நாம் காணலாம்..!

உதாரணமாக சில:-
வானத்தின் மீது சத்தியமாக 86:1
சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக 91:1
அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக  91:2
இரவு, பகல் மீது சத்தியமாக 92:1
அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக 95:1
தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக 95:2
அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக 95:3
காலத்தின் மீது சத்தியமாக 103:1

ஆனால், அல்லாஹ் சொல்லும் சத்தியங்களில் மிக "மகத்தான சத்தியமாக" ஒரு சத்தியத்தை அல்லாஹ் சிறப்பித்து குறிப்பிடுவது எது தெரியுமா சகோ...?

குர்ஆன் 77:8 
நட்சத்திரங்கள் ஒளியிழக்கும் போது...
குர்ஆன் 53:1

குர்ஆன் 56:75
குர்ஆன் 56:76

அவர் சொன்னவை என்ன...? விண்மீன்களில் nuclear fusion reaction மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் போது வெப்பமும் ஒளியும் வெளிப் படுகின்றன. இப்படி  ஆக்சிஜன் இல்லாமல் எரிந்து கொண்டு இருக்கும் விண்மீன்கள் ஒரு கட்டத்தில் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அணைந்து கருப்பாகி அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி பன்மடங்கு அதிகரிக்கும்.  இதனால், அத்துடன் அதன் 'உள் ஈர்ப்பு விசை ஆற்றல்' பன்மடங்காக ஒளி வேகத்துக்கு பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அடர்கருப்பாகி அழிந்து மறையும் நட்சத்திரம்... கருந்துளையாக மாறுகிறது.


இதற்கு கன அளவோ மேற்பரப்போ கிடையாது..! கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது..! காரணம், கருந்துளையின் நிகழ்வெல்லைக்கு(Event Horizon) செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. ஒன்றின் மீது ஒளி பட்டும் அது பிரலிபலித்து நம் கண்ணுக்கு வந்தால்தானே பார்க்க இயலும்..? ஒளியைக்கூட ஈர்க்கும் இவற்றின் ஈர்ப்பு ஆற்றல்.

நியூட்டன் சொன்னபடி நமது பூமிக்கு புவியீர்ப்பு ஆற்றல் உள்ளதால் எப்பொருளையும் நாம் ஆகாயத்தை நோக்கி எறிந்தால் அது மீண்டும் பூமியில் விழுந்து விடும். மிச்சேல் சொன்னதுபோல, அந்த பொருள் இந்த புவியீர்ப்பு விசையை மீறிச்செல்ல வேண்டுமாயின், ஒரு வினாடிக்கு 11.2 கிலோ மீட்டர் விடுபடுவேகம் வேண்டும். அதாவது... மணிக்கு 40,320 கிமீ ஸ்பீடு..! பூமியில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படும் சாட்டிலைட் தூக்கிச்செல்லும் ராக்கெட்டுகள் வினாடிக்கு 11.2 கிமீக்கு மேற்பட்ட வேகத்திலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த வேகம் குறைந்தால், திரும்பி வந்து 'கடலில்' விழவைக்கப்பட்டுவிடும்..!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னபடி, இப்பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகமான... வினாடிக்கு சுமார் 3,00,000km தான்..! அந்த வேகத்துக்கு சென்றால், ஒரு பொருள் தன் பொருண்மையை இழந்து அருகில் உள்ள மற்றவற்றை ஈர்க்க ஆரம்பிக்கும். அதேபோல, 'நமது(?)' கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் நொடிக்கு 3,00,000kmக்கும் மேல்தான்..!


இதனால்தான்... நேர்க்கோட்டில் பிரயாணிக்கும் ஒளிக்கீற்று... கருந்துளை அருகே சென்றாலும் கூட... நாம் இதுவரை பள்ளியில் படித்த இயற்பியல் விதிக்கு மாறாக,ஒளிக்கதிர்  வ...ளை...ய... ஆரம்பித்து கருந்துளையை  நோக்கி உள்ளே சென்று விடுகிறது. அப்படி சென்ற ஒளி மீண்டு வருவதில்லை..! ஒளிமட்டுமல்ல..! கருந்துளைக்குள் செல்லும் எதுவும் மீண்டு வர முடியாது..! ஏனென்றால், அந்த ஈர்ப்பு சக்தியை தாண்டிய விடுபடுவேகம் இருந்தால் சாத்தியம்..! ஆனால், உள்ளே போனதும் அங்கு அப்புறம் என்ன நடக்கிறது என்பதும் எவர்க்கும் காணவும் முடியாத புரியாத புதிர்..! 

கருந்துளைகளை நம் கண்களால் காண முடியாவிட்டாலும் இதன் நிகழ்வெல்லைக்கு (Event Horizon) அப்பால் இருக்கும் பிற நட்சத்திரங்கள், மற்ற விண் பொருட்களின் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் கருந்துளை இருக்கும் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொகுதி விண்மீன்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச்சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை கூர்ந்து நோக்குவதன் மூலம் கருந்துளையின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் அறிந்து கொள்ளலாம். 
.
சில வேளைகளில் கருந்துளைகள் அண்டவெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வரும் வளிமத்தூசுகளை கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருந்துளையைச் சுற்றி வேகமாக உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இவற்றை புவி, அல்லது விண்வெளி தொலை நோக்கி மூலம் உணர முடியும்.

மிகப்பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படும், 20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயம் இக்கருந்துளைகள்..!   
.
இப்போது மேலே போட்டுள்ள சத்திய இறைவசனங்களை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள்..! ஆக, இப்படியாக... எரிபொருள் இழந்து ஒளி இழக்கும் (குர்ஆன்-77:8நட்சத்திரங்கள் மறையும்போது... (குர்ஆன்-53:01) அப்போது அதன் ஈர்ப்பால், மற்ற நட்சத்திரங்கள் அதன் மீதுவிழுந்து உள்ளிழுக்கும் இடம் (குர்ஆன்-56:75) ஆன, "கருந்துளைகள்" மீது அல்லாஹ் செய்யும் சத்தியம் எத்தனை மகத்தானது (குர்ஆன்-56:75) என்பதை இதன் பிரமாண்டத்தின் மூலம் அடுத்த பாராவில் புரிந்து கொள்ளலாம். 
.

'நமது பிரபஞ்சத்திலேயே பெரிய கருந்துளை' என்று "கேலக்ஸி கிளாசிக்" (Galaxy Classic) எனும் மேலே நீங்கள் பார்க்கும் கருந்துளையை கடந்த 2008 மார்ச் 18-ல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். இந்த கருந்துளையின் பரிமாணம் மிகப்பிரமாண்டமானது. நமது சூரியனின் விட்டம் 'வெறும்... 13,92,000km. தான்'..! இதைவிட 1800 கோடி மடங்கு மிகப்பெரியது அந்த கருந்துளை..! 

நம்மை பிடித்து இழுத்து 'விழுங்கி' விடுமோ என பயப்படாதீர்கள் சகோ..! நாம் அதன் அருகில் இல்லை..! :-)) நமது பூமியில் இருந்து 350 கோடி 'ஒளி ஆண்டுகள்' தொலைவில் உள்ளது..! 

சரி, '1 ஒளி ஆண்டு' என்றால் எவ்வளவு தூரம்..? ஒரு நொடியில் துல்லியமாக 2,99,792 km தூரம் செல்லும் ஒளியானது, இதே வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் பயணித்தால் எவ்வளவு தூரம் செல்லுமோ... அதுவே 'ஒரு ஒளி ஆண்டு' தூரம் ஆகும்..! 

இதன் பிரம்மாண்டம் பற்றி இன்னொன்றும் உள்ளது. இப்பிரபஞ்சத்தின் ஆகசிறிய கருந்துளையின் பிரம்மாண்டம் என்ன தெரியுமா சகோ..? அது... சூரியனை விட ஒரு கோடி மடங்கு பெரியது..! :-))

வானில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் அல்லாஹ் நாடியவை தன் எரிபொருளை இழந்து அடர்த்தி அதிகமாகி கருந்துளையாக மாறலாம். பிரபஞ்சத்தில் இதுபோல ஏராளமான கருந்துளைகள் உருவாகி விட்டன. நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனின் இறுதி முடிவும் இவ்வாறே..! அது எப்போது கருந்துளை ஆகி, பூமி உட்பட அதன் நிகழ்வெல்லைக்குள் (Event Horizon) உள்ள அனைத்தையும் தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும்(!?) என்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்..!  
.
குர்ஆன்77:7 உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.
குர்ஆன்77:8 நட்சத்திரங்கள் ஒளியிழக்கும் போது,
குர்ஆன்77:9 வானம் பிளக்கப்படும் போது,
குர்ஆன்77:10 மலைகள் சிதறடிக்கப்படும் போது,
குர்ஆன்77:11 தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும் போது (அது நடந்தேறும்)
குர்ஆன்77:12 (இவை) எந்த நாளுக்காகத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது..?
குர்ஆன்77:13 (கியாமத் நாள் எனும்) தீர்ப்பு நாளுக்காகவே..!

குர்ஆனின் ஒளியில் எல்லா நட்சத்திரங்களும் கருந்துளைகளாக எப்போது மாறும் என்றும் காண்கிறோம்..! சுபஹானல்லாஹ்..! 

அறிவார்ந்த வாழ்வியல் நெறிநூலான இக்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை இடையிடையே உலக மக்களுக்கு தொட்டுக்காட்டி அச்சமூட்டி எச்சரிக்கை செய்து இறுதிநாளுக்கு முன்னர் நேர்வழிக்குள் வந்துவிடுமாறு அழைத்து, 'படைக்கப்பட்ட போலி பொய் தெய்வங்களை விடுத்து, நாம், நம் உலகம், சூரியன், சந்திரன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் கொண்ட இந்த மாபெரும் கேலக்ஸிகளை கொண்ட பிரபஞ்சத்தை மட்டுமலாது இன்னும் ஆறு பிரபஞ்சத்தை படைத்த ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள்' என்று குர்ஆன் கூறுவதை காணலாம்.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அதேநேரம், இவ்வளவு அறிவியல் உண்மைகளையும் கற்று புரிந்து தெளிந்து இறைவனின் மகத்துவத்தை ஐயம் திரிபற அறிந்து இன்று இஸ்லாமை வாழ்வியல் நெறியாக பின்பற்ற ஆரம்பிக்கும் இக்காலத்தினரைவிட, அக்காலத்தில், எவ்வித அறிவியல் உண்மையும் அறியாமல் தெரியாமல் புரியாமல் "சமிஃணா; வஅத்தஃணா" (கேட்டோம்; வழிபட்டோம்) என்று இறைத்தூதர்கள் சொன்னதை அப்படியே ஏற்று இறைநம்பிக்கை கொண்டு இஸ்லாமியவாழ்வியல் நெறியை பின்பற்றும் முஸ்லிம்களாகி, மிகச்சிறந்த ஒழுக்க சீலர்களாக, உயர்ந்த பண்பாளர்களாக, பயபக்தியோடு வாழ்ந்தவர்கள் பற்பல மடங்கு ஈமானில் உயர்ந்தவர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..!
http://annajaath.com/?p=2852
thanks to mohamed ashiq, citizen of the world

ur brother
rahmanfayed./...

பல்லண்டம்... அது பிரம்மாண்டம்..!

ஒரு  வீட்டில் சுமார் 4 பேர். வீதியில் சுமா 100 வீடுகள். ஊரில் சும 50 வீதிகள். அந்த ஊருள்ள வட்டத்தில் சு 70 ஊர்கள். மாவட்டத்தில் சு 8 வட்டங்கள். மாநிலத்தில் சு 30 மாவட்டங்கள். நாட்டில் சு 25 மாநிலங்கள். கண்டத்தில் சு 20 நாடுகள். இந்த உலகத்தில் 7 கண்டங்கள். இந்த சூரிய குடும்பத்தில் 8 கிரகங்கள். சூரிய குடும்பம் உள்ள (பால்வீதி மண்டலம்) மில்கி-வே கேலக்ஸியில்  சுமார்ர்ர்ரர்ர்ர்... 10,000,00,00,000 சூரியன்கள்....... ஐ மீன்....... விண்மீன்கள் உள்ளனவாம்..! 
.
Ours Milky-Way Galaxy...நமது பால்வீதி மண்டலம் (அதன் மையம் ஒரு... கருந்துளையாம்..!!!)

இப்பிரபஞ்சத்திலும் சுமார்ர்ர்ரர்ர்ர்ர்... பத்தாயிரம் கோடி கேலக்ஸிகள் உள்ளனவாம்..!!

அப்புறம் இது போல இன்னும் "ஆறு பிரபஞ்சங்கள்" வேறு இருக்கின்றனவாம்..!!!

எனில், அந்த ஏழாவது பிரபஞ்சத்தின் தூரத்து கடைசி மூலையில் போய் நீங்கள் நின்று கொண்டு... ஹி...ஹி... அங்கிருந்தபடியே... பார்த்து சொல்லுங்கள் சகோ..! நான் உங்களுக்கு தெரிகிறேனா..? எனது அளவு என்ன..?

நான் உங்களை வந்தடையும் வழி....... என் அறை -வீடு -வீதி -ஊர் -வட்டம் -மாவட்டம் -மாநிலம் -நாடு -கண்டம் -உலகம் -சூரியகுடும்பம் -பால்வீதிமண்டலம் -அண்டம்(பிரபஞ்சம்) -பல்லண்டம்(ஏழு பிரபஞ்சம்)..!

Flashback..........Big Bang theory...........!

'பிக் பேங் தியரி' எனப்படும் இந்த பெரு வெடிப்புக்கோட்பாடானது 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 2 முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச்சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற்கொள்கை (Cosmological Principle).
.
'பிக் பேங் தியரி'யின்படி, நாம் வாழும் இந்த பூமி உட்பட இவ்வண்ட வானவெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கி இணைந்திருக்கும் மிகச்சிறிய அளவினதான தீப்பிழம்பாகத்தான் இருந்திருக்கிறதாம். இத்தீப்பிழம்பானது இன்றுவரை 'அறிவியலால் அறியப்படாத ஏதோ ஒரு சக்தியின் காரணத்தினால்' மிக வேகமாக வெடித்து விரிவடையத்தொடங்கி விட்டதாம்..!

ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ்விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக்கூட்டங்களாக 'உருவாகி இருக்கக்கூடும்' எனவும் அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் நாம்  வாழும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாக ஆறிவியல் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராக பரவிக்காணப்படும் நுண்ணலைக்கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெருவெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப்படுகின்றது.

ஐன்ஸ்டீனின் பொதுச்சார்புக்கோட்பாடு, என்னசொல்கிறது என்றால்... இவ்வண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்பானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் யாவும் ஏதோ இஷ்டத்துக்கு அள்ளித்தெளிக்கப் பட்டவையாக அல்லாமல் அண்ட வானவெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற்கொள்கை..!
.
ஆக, இப்படியான அண்டத்திலுள்ள பூமியில் 'எப்படியோ' நீர் இருந்ததால்தான், அதில் முதல் உயிரினம் 'உருவானதாக' சொல்கின்றனர், அறிவியலாளர்கள். காரணம், ஒவ்வோர் உயிரியின் உடல் கட்டுமானத்திற்கு மிகவும் செல்லுக்கு, அவசியமான ப்ரோட்டின் உருவாவதற்கு அடிப்படையான அமினோ ஆசிட் மூலக்கூறானது தண்ணீருக்குள்ளே தான் உருவானது என்றும் அது உருவாகவும் தண்ணீர்தான் அவசியம் என்றும் (Primordial soup theory) சொல்கின்றனர், அறிவியலாளர்கள். மாறுபட்ட வேறுசில தியரிகளும் உள்ளன. சுமார் 100 - 60  வருடங்களுக்கு முன்னர்தான் இந்த அறிவியல் கோட்பாடுகளின் முன்னேற்றம் எல்லாம்..! பெரும்பாலான அறிவியலாளர்களால் இக்கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. BigBang-ற்கு மாற்றமான "Big Bounce" தியரிக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை..!
.
பொதுவாக  நாம் நண்பர்களுடன் சிறுவயதில் பள்ளிக்கூட கணித புத்தகத்தில் ஏதேனும் ஒரு பயிற்சிக்கணக்கை பக்கம் பக்கமாக போட்டுவிட்டு அதன் 'இறுதி விடை சரியா' என்று பரிசோதிக்க புத்தகத்தின் கடைசி பக்கங்களை (விடைப்பக்கம்) திருப்பி அங்கே உள்ள கட்டக்கடைசி ஸ்டெப் விடையை பார்ப்பதுண்டு..! ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விடைகள் வரும் நிலையில், நம் விடை சரியாக இருந்தால் பெரும்மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா..!


பொதுவாக ஒரு 'அறிவியல் கொள்கைக்கு', 'அறிவியல் நிரூபணம்' இருந்தால் அது Fact என்று அழைக்கப்படுகின்றது. இல்லையெனில், அது theory என்றே அழைக்கபடும்..! இதுபோல பல தியரிகள் பல கோணங்களில் இருப்பதால் எது சரி என்று அறிவது..? இப்படியாக...........


நிரூபணம் இல்லாத -நிரூபிக்க முடியாத- நிரூபிப்பதற்கு  வழியற்ற அறிவியல் கோட்பாடு(theory)களை பொறுத்தமட்டில், அதை சரிகாணும் நோக்கில், குர்ஆன்தான் நமக்கு ஒரு விடைப்பக்கம்..! அது இறைவசனம் என்பதால்..!

இறைவன் சொல்வது என்ன...? குர்ஆன் - 51:47  இறைவசனத்தில்... 
வானங்களும்(இங்கே பன்மையில் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள் சகோ) பூமியும்இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம்என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்துஅமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா..? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா..? 
தியரிகள் சரிதான்..! அடுத்து, அதென்ன... வானம் என்று இல்லாமல், 'வானங்களும்' என்று பன்மை..? அது அப்புறம் இருக்கட்டும். வேறு பல இடங்களில் குர்ஆன் குறிப்பிடும் 'வானம்'  என்றால் முதலில் என்ன..? அது எதைக்குறிக்கிறது..?

பொருண்மை & ஆற்றல் (matter & energy) இவற்றால் இவ்வண்டம் நிரப்பப்பட்டுள்ளது என்கின்றனர் அறிவியலாளர்கள். இதனை நாமும் நம்மை சுற்றி உலகை பார்க்கும் போது அறிகிறோம்.
According to the law of conservation of mass & energy, mass and energy can neither be created nor be destroyed..! But one form can be converted into another..! ( நன்றி: mass law- 1785 லவோய்சியர், energy law-1842 ராபர்ட் மேயர் )
Generally law is a fact..! ஆனால், மனிதனால் உருவாக்க இயலாத, மாற்ற மட்டுமே முடிந்த, அந்த முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ஆற்றலும்... அந்த முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் பொருண்மையும்... எங்கிருந்து 'உருவாகி' வந்தனவாம்..? எட்டாம் வகுப்பில் இருந்தே கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்..! அறிவியலில் இன்னும் விடை இல்லை இதற்கு..! ஆகச்சிறிய ஒரு 'பொருள்'... big bang சமயத்தில் 'ஆற்றல்' வெளிப்படும்படி வெடித்தது..! ஆனால், அந்த 'பொருள்'...அதற்கு முன்னர்..? அந்த 'பொருள்' எல்லாம் 'ஆற்றலாக' இருந்திருக்க வேண்டும்..! 'ஆற்றல்', இதுபோல 'பொருளாக' மாறுமா..? இது கேள்வி..!
.
பொருண்மை ஆற்றலாகவும், ஆற்றல்  பொருண்மையாகவும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மாறக்கூடியதே..! இதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின், 1907-ம் ஆண்டின், E=mc² என்ற உலகப்புகழ்பெற்ற சமன்பாடு சொல்கிறது..! அதோடு இவ்வண்டத்தின் ஆற்றலும் பொருண்மையும் சமம் என்கிறது..!
.
ஆக, பெருவெடிப்புக்கு சற்று முன்னர் ஒரு பொருளாக அண்டம் இல்லை..! அதற்கு முந்திய தருணம் ஆற்றலாகத்தான் இருந்திருக்க வேண்டும்..! அது பொருளுமாகி ஆற்றலுமாகி விரிவடைந்து கொண்டே இருப்பதையும் அறிகிறோம். நாம் முன்னரே பார்த்த Big Bang நிகழ சாத்தியமான 'ஏதோ ஒரு அறியப்படாத சக்தி' எது..? எங்கிருந்து வந்தது..? ஆக, 'அந்த சக்தி' இலிருந்துதான் இந்த அண்டம் பொருளாகி ஆற்றலுடன் விரிவடைந்து கொண்டு இருக்கிறது..!இதை 'Expanding Universe' என்றும் அறிவியலாளர்களின் கோட்பாடுகள் சொல்கின்றன..!  
.
power -[சக்தி ] is the rate at which energy [ஆற்றல்] is transferred..! ஆக... அந்த 'முதல் ஆற்றல்' யாருடையது சகோ..? Big Bang-ல் ஆற்றலை பொருளாக மாற்ற உபயோகிக்கப்பட்ட சக்தி யாருடையது சகோ..? விடை இதோ..!

குர்ஆன் - 51:47  இறைவசனத்தில்...
வானத்தை (இங்கே ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள் சகோ(நம்) சக்தியைகொண்டு அமைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்து வோராவோம்.
தியரி சரிதான்..! எல்லை தெரியாத இந்த 'விரிவடையும் வானம்' (விரிவடையும் அண்டம்) அதாவது Expanding Universe எப்படிப்பட்டது..? அதில் ஏகப்பட்ட விண்மீன் கேலக்ஸிகள் உள்ளன அல்லவா..? இந்த பிரபஞ்சத்தை விஞ்ஞானிகளில் ஒரு சாரார், கேலக்ஸி போல 'தட்டை' என்றும்... மற்றொரு சாரார் கோள்கள் /விண்மீன்கள் போல 'கோளம்' என்றும்... இன்னொரு சாரார் வித்தியாசமாக 'நீள கோள மாத்திரை' போன்றது என்றும்... விதவிதமாக படம் வரைந்து பலமாதிரி வாதங்களுடன் தியரி சொல்கின்றனர்..! எது சரி..?
நீள் கோள மாத்திரை வடிவ விரிவடையும் கற்பனை பிரபஞ்ச படம்..!
(The shape of the expanding universe is a matter of debate till now.)

குர்ஆன் - 37:6  இறைவசனத்தில்...
முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்

நட்சத்திரங்கள் என்றால்... அது விண்மீன்கள்  அல்லது  'விண்மீன்கள் அடங்கிய கேலக்ஸிகள்'..! அதெல்லாம் சரி... இது என்னது..? "முதல்" வானம்...? அதாவது... 'முதல் பிரபஞ்சமா'..? அப்படி என்றால்... இது நாம் வாழும் "முதல் அண்டம்" எனில், நம் அண்டத்துக்கு வெளியே வேறு அண்டங்களும் உண்டா..? 

'ஆம்'... சில/பல 'இருக்கலாம்' என்கின்றன அறிவியலின்... சில தியரிகள். ஆனால்,  Multiverse Bubble Universes Theory... அதில் 'ஏழு அண்டங்கள்' அடுக்கடுக்காக உள்ளதாகவும் கூறி வண்ணப்படம் போட்டு விவரிக்கிறது, Multiverse... எனும் 'பல்லண்டம்' கோட்பாடு..!
.
The multiverse theory is the hypothetical set of multiple possible universes...பல்லண்டம்..!
இந்த தியரியில் இரண்டு... மூன்று... ஆறு.. என்றெல்லாம் இல்லாமல்... அதென்ன கணக்கு 'ஏழு'..? பல கணக்கீடுகளுக்கு பிறகு இத்தியரி சொல்லப்பட்டாலும், ஆச்சர்யம்தான் எனக்கு..! இது சரியாக இருக்குமா..?

எண்ணற்ற பல விண்மீன் கேலக்ஸிகள் உள்ள நாம் வாழும் இந்த  பிரபஞ்சத்தைத்தான் "முதல் வானம்" என்று நம் யுனிவர்ஸ் (அண்டம்) பற்றி கூறும் இறைவன், இது அல்லாமல் மேலும் "ஆறு வானங்கள்" சேர்த்து 7  அண்டங்கள் இருப்பதை பற்றி குர்ஆனில் (விடைப்பக்கம்..!) குறிப்பிடுவதை காணலாம்..! 

ஆனால், மேலே உள்ள படம் 'தலைகீழாக'(?) உள்ளது என்று எனக்கு தோன்றுகிறது..! ஏனெனில், முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் விண்ணுலக மிஹ்ராஜ் பயணம் ஹதீஸ் இதை தெளிவாக சொல்கிறது. (புஹாரி-3207) இதன்படி, நமது அண்டம்தான் கீழே இருக்குமாறு அந்த தியரியில் வரையப்பட்டிருந்திருக்க வேண்டும்..!

குர்ஆன் 71:15 இறைவசனத்தில்....
ஆகவே, அடுக்கடுக்கடுக்காக அண்டங்களை அடுக்க கோள வடிவ பிரபஞ்ச கோட்பாட்டை  விட, 'நீள்கோள மாத்திரை' அல்லது 'தட்டை' பிரபஞ்ச தியரிகள் ஓகே போல தெரிகின்றன..! எது எப்படியோ...! நம் முதல் அண்டத்தின் பிரம்மானடமே அத்துனை பெரியது என்றால்.... மற்ற 7-அண்டங்கள்... பல்லண்டம் எத்துனை  பிரம்மாண்டம்..? சொற்ப அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட நமக்கு ஏழு பிரபஞ்ச பிரமாண்டம் என்பது ஒரு நல்ல படம் வரையக்கூட கற்பனைக்கு எட்டாத ஒன்று. சுபஹானல்லாஹ்..!

நமது அண்டத்திலேயே நமக்கு தெரியாத நாம் இன்னும் நாம் அறிய முடியாத ஆற்றல்களும் அறியமுடியாத பொருள்களும் உள்ளன. அதை எல்லாம் கருப்பு ஆற்றல் (Dark Energy)கரும்பொருள் (Dark Matter) என்கின்றனர். நமது பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமாக சொல்லப்படும் ஒரு கருதுகோள் அளவிலான ஆற்றல் இது..! அண்டத்தில் நமக்கு தெரிந்தது..... 4% தானாம்...?!?!?!?!


பெருவெடிப்புக்கொள்கையின் படி நமது பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து பல்வேறு வேகத்தில் (900 km/s வேகம் முதல்... ஒளியின் வேகமான 3,00,000  km/s யையும் தாண்டி... நாம் அறிந்து அதிகபட்சமாக 5,40,000 km/s வேகம் வரை) விரிவடைந்து கொண்டே போகிறது. இப்படி, நம் அண்டத்தின் கேலக்ஸிகள் இவ்வளவு வேகமாக ஒன்றை ஒன்று விலகி ஓட காரணமான ஆற்றல் எது..? அதுதான் Dark Energy எனப்படும் 'கரிய ஆற்றலாம்'..!

பிரபஞ்சவியலின் திட்டவட்ட வடிவமைப்பின்படி பார்த்தால் நம் பிரபஞ்சத்தின் 74% கரிய ஆற்றலும் 22% கரும்பொருளும் உள்ளது..! அண்டவெளியில் உள்ள வஸ்துக்கள் போக மீதி உள்ளவை எல்லாம் வெற்றுவெளி என்ற எண்ணமும் காணாமல் போய் விட்டது. அதை கரும்பொருள், கரிய ஆற்றல் எல்லாம் ஆக்கிரமித்துள்ளன..! No empty space in the Universe. Dark Matterfills the intergalactic space... என்கிறது நவீன அறிவியல்..! வெட்ட வெளியான ( vacuum ) வானத்தை எப்படி 'படைக்க முடியும்' என்று இன்னும் கேட்டுக்கொண்டு இருப்போரை பார்த்தால்... எனக்கு பரிதாபமாக இருக்கிறது சகோ..!

குர்ஆன் 50:38 இறைவசனத்தில்....
வானங்களையும், (சகோ,கவனிக்கவும்... பன்மை) பூமியையும், அவற்றுக்குஇடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக்களைப்பும் ஏற்படவில்லை.
எனவே, அந்த கரும்பொருள்.. கரிய ஆற்றல் தியரிகள் எல்லாம் சதவேத அளவில் வேறுபடலாமே அன்றி சரியான அனுமானங்கள்தான்..!

"ஒளியின் திசைவேகத்தை விட அதிகமான திசைவேகத்தை எந்த ஒரு பொருளும் அடையவே முடியாது" என ஐன்ஸ்டீன் உறுதியாக நம்பினார்..! ஆனால், அதெல்லாம் ஹப்பிள் காலத்தில் பழைய அறிவியல் ஆகிவிட்டது..! கருப்புஆற்றல் - இது அதிகரிக்க அதிகரிக்க காலம் மற்றும் இடப்பரிமாணங்களில் மாற்றம் ஏற்பட்டு... 'ஒரு பொருள் ஒளியின் வேகத்திற்கும் அதிகமான வேகத்தை எல்லாம் அடைய முடியும்' என்பது பிந்தைய அறிவியல் உலகின் நம்பிக்கை..! வேகுதூரே விலகிச்செல்லும் '5.82 quasar' எனும் ஒரு கருந்துளையின் வேகம்... ஒளியை விட 1.8 மடங்கு அதிகம் என்று அளக்கப்பட்டுவிட,அந்த நம்பிக்கையை இது உறுதி செய்துவிட்டது..! 

'Flashfront'..(!?).........Big Crunch theory........!

இப்படி விரிவடையும் பிரபஞ்சம்... இப்படியே விரிவடைந்து கொண்டே செல்லாதாம்..! எதிர்காலத்தில் ஒருநாள் சுருங்கிவிடுமாம்..! அதை "பெரும் அண்டக்குழைவு" (Big Crunch)என்கின்றனர் விஞ்ஞானிகள்..! நமது பேரண்டத்தின் கடைசி விதியாக பிரபஞ்சவியல் வல்லுநர்கள் முன்வைக்கும் எதிரெதிரான கருதுகோள்களுள் ஒன்று இது..!

(மற்றவை: "Big Freeze"=விரிவடையும் அண்டம் இறுதியில் உறைந்துவிடும், "Big Rip"=விரிவடையும் அண்டம்  இறுதியில் கிழிந்துவிடும்.)

Big Crunch-படி விரிவடைந்து கொண்டே போகும் நமது பிரபஞ்சம் கடைசியில் ஒட்டு மொத்தமாய்சுருண்டு சுருங்கி ஒரு 'கருந்துளை'யாகி விடும்..! (பார்க்க:- கருந்துளை பற்றி விரிவாக எனது முந்திய பதிவு)


இதற்கு வாய்ப்பு இருக்கிறதா..? ஆம்..! இருந்தால், எப்போது எப்படி அது நடக்கும்..?

குர்ஆன் 21:104 இறைவசனத்தில்....
எழுதப்பட்ட ஏடுகளை சுருட்டுவது போல் வானத்தை (கவனியுங்கள் சகோ... ஒருமையில்உள்ளது... ஒரு அண்டம் அழிக்கப்படுவது பற்றி மட்டுமே இவ்வசனம் கூறுகிறது...) நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம். 
இவ்வசனத்தில்,  'கியாமத் நாள்' எனப்படும் இறுதிநாளில், ஓர் அண்டத்தின் இறுதியாக அண்டக்குழைவு கோட்பாட்டை சரிகான்கிறோம். ஆனால், நான் தேடியவரை 'பல்லண்டத்துக்கு ஒரு குழைவு கோட்பாடு'  ஒன்றை இன்னும் யாரும் வகுக்கவில்லை போல..! ஆனால், நமது விடைப்பக்கமான குர்ஆன் அதையும் அட்வான்சாகவே அதே கியாமத்நாளில்... 'பல்லண்டத்திற்கு என்ன ஏற்படும்' என சொல்லிவிடுவதையும் காண்கிறோம்..!

குர்ஆன் 39:67 இறைவசனத்தின் இடையில்.....
......கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும்.வானங்கள் (கவனியுங்கள் சகோ... பன்மையில் உள்ளது... பல்லண்டம் அழிக்கப்படுவது பற்றி இவ்வசனம் கூறுகிறது...) அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்......
---என்று தெளிவாக அல்லாஹ் அறிவித்து விடுவதை காண்கிறோம்..!

இதுவரை  நாம் ஃப்ளாஷ்ஃபேக்கில் 'பார்த்த(!)' Big Bang மற்றும் ஃப்ளாஷ்ஃப்ரண்ட்டில் 'பார்க்க(!)இருக்கும்' Big Crunch ஆகிய இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த ஏழு அண்டங்களிலும் இருப்பவை  எல்லாம் அதனதன் வரையரையில் செவ்வனே சரியான அச்சில் சுழன்றும், துல்லியமான ஈர்ப்பு விசையில் ஒன்றை ஒன்று சுற்றியும், சீரான வேகத்தில் அனைத்தும் ஓடிக்கொண்டும் இருக்கின்றனவே... எப்படி...? இதெல்லாம் யாருடைய கட்டுப்பாட்டில் சாத்தியப்படுகிறது..?


வேறொரு கேலக்ஸியில் இருந்து பூமிக்கு அருகே UFO -வில் வரும் ஒரு Alien  (வேற்றுக்கிரக வாசி) நமது பூமிக்கு மேலே பறந்து கொண்டு இருக்கிற அத்தனை சேட்டிலைட்டுகளையும் பார்த்துவிட்டு, "இவை தானாக உருவாகி தானாவே அந்த கிரகத்தை சுற்றி வரும் துணைக்கோள் தூசிக்கூட்டம் போல..." என்று நினைத்தால்... அது அறிவுடைமையா..? கஷ்டப்பட்டு அவற்றை எல்லாம் செய்து விண்ணுக்கு அனுப்பிய நாசா, இஸ்ரோ போன்ற உலகநாட்டு சேட்டிலைட் ஏவுதள விஞ்ஞானிகள் இப்புரிதலை சரியென சகித்துக் கொள்வார்களா ..?


குர்ஆன் 35:41 இறைவசனத்தில்....
வானங்களும்,(கவனியுங்கள் சகோ... பன்மையில் உள்ளது) பூமியும் இடம் பெயராதபடி அ(இறை)வனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத்தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத்தன்மை உடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான். 

ஆனால் இதனை நம்புவர்கள் எப்படிப்பட்டவர்களாம்..?
குர்ஆன் 32:15 இறைவசனத்தில்....
நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும் போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனை புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்..!
சுப்ஹான ரப்பியல் அஃலா....
'உயர்வான எனது இரட்சகன் தூய்மையானவன்' 

References:
http://corpus.quran.com
http://www.tamilquran.in
http://www.searchtruth.com
http://www.islamawakened.com
http://en.wikipedia.org/wiki/Big_Bang
http://en.wikipedia.org/wiki/Dark_energy
http://www.messagetoeagle.com/darkmatt.php
http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe 
http://www.wonderquest.com/ExpandingUniverse.htm
http://en.wikipedia.org/wiki/Multiverse#Bubble_theory
http://www.sunniforum.com/forum/archive/index.php/t-14343.html
http://www.chemteam.info/Thermochem/Law-Cons-Mass-Energy.html
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
http://news.nationalgeographic.com/news/2005/11/1102_051102_black_hole.htm
thanks to my dear mohamed ashiq brother, citizen of the world.



ur brother

rahmanfayed./.......



தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்

சார்பியல் கொள்கையும் இஸ்லாத்தின் பார்வையும்:

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி உண்டாவதாக.

நமது முந்தைய பதிவான “கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும்” பதிவை காண இங்கு சொடுக்கவும்.

இறை மறையின் காலம் பற்றிய செய்திகளையும், தவறாக காண்பிக்கப்படும் நபியின் விண்வெளி பயணத்தை பற்றிய அறிய சில செய்திகளையும், சில விசயங்களை மறைத்து பொய் தகவல்களை இணைத்து வெளிப்படுத்திய நாத்திக, கம்முனிஷ பொய்களையும் உடைப்பதற்கே நம்முடைய இந்த பதிவுகள்.

இப்பிரபஞ்சத்தில் அனைத்தும் காரண காரியங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் விதி. இப்பிரபஞ்சம் நேர்த்தியாக வடிவமைக்கபட்டதுமில்லாமல் பொதுவான இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு அதன் பயணத்தை தொடர்கிறது. ஒரு சிறு பொருள் அசைந்தாலும் கூட ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கும், இயற்பியல் விதிகளின் படியே செயல்படும். மனிதன் தான் செயல்படுத்தும் செயல்களில் கூட ஒரு நேர்த்தியை எதிர்பார்க்கிறான், அப்படியிருக்க இறைவனின் அரசாட்சி இப்பிரபஞ்சம் நேர்த்தியாக உள்ளதும், அடிப்படை இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் இறைவனின் நேர்த்தியை குறிப்பது. தானாக உருவானது என்ற வாதத்தை வைக்கும் நாத்திகர்கள் இயற்பியல் விதிகளை பின்பற்றி அனைத்தையும் சரியான முறையில் இயக்க வேண்டிய அவசியம் இயற்கைக்கு இல்லை என்பதை உணர வேண்டும்.

இப்பிரபஞ்ச இயக்கதிற்காகவே முதலில் விதிகள் உருவாக்கப்பட்டன. விதிகள் இல்லாத பொருள் எப்படி இருக்க, இயங்க முடியும்? விதிகள் இல்லையெனில் பிரபஞ்சமே இல்லை, உயிரினமும் இல்லை, அதற்கு வாய்ப்பும் இல்லை. அப்படியெனில் இயற்பியல் விதிகளை பின்பற்றும் இயற்கையை உருவாக்கியது வேறு ஒரு சக்தியாகத்தானே இருக்க முடியும்.

ஆக இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒன்றும் இயற்பியல் விதிகளை மீறமுடியாது, அதை உருவாக்கியவனை தவிர. விதியை இயற்றியவன் இறைவன் என்கிற போது அது இறைவனுக்கு இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளை எவ்வளவு அறிவியல் பூர்வமாக விளக்கினாலும் அது அடிப்படை நம்பிக்கை சார்ந்த மார்க்கமாகும். ஆதாரங்களின் அடிப்படையிலான நம்பிக்கையே அது, இஸ்லாத்திற்கு மட்டும் அல்ல, அறிவியலுக்கும் அதே நம்பிக்கை தான் ஆணிவேர். ஆம் ஒரு கண்டுபிடிப்பை ஆதாரங்களுடனான நம்பிக்கை மூலம் அணுகினால் மட்டுமே அதை உருவாக்க முடியும்.

பல நாத்திகர்கள் இறைவனின் ஆற்றல், அதிசயம் சார்ந்த கேள்விகளை எழுப்புவதை காண முடிகிறது. இயற்கையாக நடைமுறையில் உள்ளதை யாராவது அதிசயம் என்று கூறுவார்களா? மனிதனின் சக்திக்கு மீறிய இயற்கைக்கு மாறாக நடைபெறுவது தான் அதிசயம். அது இயற்பியல் விதிகளுக்கு மாறாக கூட இருக்கலாம். இதில் தான் நாத்திகர்களின் கேள்விகள் எழுகின்றன. மற்ற அனைத்தும் சில வரையரைகுட்பட்டவைகள்.

இதை வைத்து பார்க்கும் போது இஸ்லாம் விளக்கிய அனைத்தும் கூட இறைவன் உருவாக்கிய பிரபஞ்ச விதிகளுக்குள் கட்டுப்பட்டுதான் நடக்கும். அந்த விசயங்களை மனிதனால் சுலபமாக விளக்க முடியும். இதுவல்லாமல் இறைவனின் அதிசயங்கள்,ஆற்றலை வெளிப்படுத்த கூடியவைகள் உதாரணமாக சந்திரன் பிளக்கப்பட்டது, இறந்த மனிதனை ஏசுநாதர் எழுப்பியது, மோசேயின் கைத்தடி பாம்பாக மாறியது etc. இது போன்றவைகள் இயற்பியல் விதிகளுக்கு மாறாகத்தான் இருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில் தான் அது அதிசயம் என்றும் கூறப்படும், மேலும் இது இறைவனால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை சார்ந்தது, இதற்கு அறிவியலில் ஆதாரம் கேட்பது, இப்படி நடக்க வாய்ப்பில்லை என்று வாதிடுவது ஏற்றுகொள்ள முடியாதது. ஏனெனில் இறைவன் உருவாக்கியதை இறைவனால் மீற முடியாதா என்ன? என்ற ஏற்றுகொள்ளதக்க கேள்வி வரும். அந்த அதிசயங்களும் நேரில் கண்டால் மட்டுமே புரியக்கூடியது ஆகும்.

இந்த வரைமுறைகளை வைத்து இறைவனும் விதிகளுக்கு உட்பட்டவன் என்பதாக கருதுகின்றனர். இறைவன் தான் விதிகளுக்கு அப்பாற்பட்டவன் ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் விதிகளுக்குட்பட்டவையே. இதை இறைவனின் சில வசனங்கள் மூலம் விளங்கலாம்,

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி     (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் குன்‘ –ஆகுக – என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வேஅவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன்ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன்10:03)

மேலே கொடுக்கப்பட்ட இரண்டு  வசனங்களும் ஒன்றுக்கொண்டு மாறுபட்டவையாக தோன்றலாம், அவன் ‘ஆகுக’ என்றால் ஆகிவிடும் அப்படி இருக்க எதற்காக ஆறு நாட்கள் (காலங்கள்). இரண்டுமே உண்மைதான், இந்த ஆறு நாட்கள் என்பது பிரபஞ்சம் உருவாகி ஆறு நாட்களாக, ஆறு பகுதிகளாக கூட இருக்கலாம். இறைவனின் புறத்தில் ஆகுக என்றால் ஆகிவிடுகிறது, ஏனெனில் அவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். அவனுடைய பார்வை நாளை என்ன நடக்க போகிறதோ என்று எதிர்பார்க்கும் பார்வை அல்ல. மனிதனுடைய பார்வையில் காலம் என்றொன்று சேர்ந்து விடுகிறது.

இதை இறைவனே இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும்அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.ஆனால்நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
(அல் குர்ஆன் 70:4–7)

“இஸ்லாம் கூறும் சார்வியல் கோட்பாடு” என்ற தலைப்பில் onlinepj.com இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை சரியாக புரிந்து கொள்ளாமல் பதிலளிக்கிறேன் என்ற பெயரில் செங்கொடி என்பவர் தன்னுடைய பொய்களை இணைத்து “கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா” என்ற தலைப்பில் பதிவாக இட்டது பதிவுலகில் உள்ளவர்கள் அறிந்ததே, இவரின் பதிவில் குர்ஆன் வசனங்களையும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையையும் விளங்கி கொள்ளாமல் தனக்கு தோன்றிய கருத்துக்களை கூறியுள்ளார் என்றால் அது மிகை இல்லை.

சார்பியல் கொள்கைகளை தெள்ள தெளிவாக எடுத்து வைக்கும் மூன்று குர்ஆன் வசனங்களுக்கும் சார்பியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே செங்கொடி போன்ற இறை மறுப்பாளர்களின் வாதம், தங்களுடைய பொய் பிரசாரத்திற்காக அவர்களால் எடுத்து கொள்ளப்பட்ட சில குர்ஆன் வசனங்களும் அதன் விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, 

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். 
22:48. அநியாயங்கள் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்; பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன்; மேலும் (யாவும்) என்னிடமே மீண்டும் வரவேண்டும்.

22:47. Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning.
22: 48. And to how many populations did I give respite, which were given to wrongdoing? in the end I punished them. To me is the destination [of all].

70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:4. The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is [as] fifty thousand years:

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

32:5. He rules [all] affairs from the heavens to the earth: in the end will [all affairs] go up to Him, on a Day, the space whereof will be [as] a thousand years of your reckoning.

எதற்காக இறைவன் ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று கூற வேண்டும், இங்குதான் சார்பியல் கோட்பாடு வருகிறது.

மேலே கொடுக்கப்பட்ட முதல் இரண்டு வசனங்கள் 22:47,48 ஆகியவை இறைவனின் வேதனையை பற்றிய வசனங்கள், அதாவது வேதனை வந்தடைவதர்கான கால அளவை பற்றி குறிப்பிடுகிறது, அதை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள் என்றும், இரண்டாம் பகுதியில் குறிப்பிடும் போது கால அளவையும் குறிப்பிடுகிறான், தண்டனையின் வேகத்தை பற்றி குறிப்பிடும் போது கால அளவை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன, அப்படியெனில் காலத்தை குறிப்பிட்டாலே அதில் வேகமும் உள்ளது என்று தான் அர்த்தம். கடந்த நூற்றாண்டில் தான் வேகத்தை பொருத்து காலம் மாறுபடும் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது, சார்பியல் கொள்கைக்கு பிறகுதான்.


அதே போன்று 70:4 வசனத்தில் வானவர்களின் பிரயாணம் பற்றி பேசும் குர்ஆன் பிரயாணத்தில் இருக்கும் போது வானவர்களின் ஒரு நாளின் அளவு என்பது பூமியில் இருக்கும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்று கூறுகிறது.

அடுத்த வசனமான 32:5 என்ற வசனமும் கால மாறுதல்களை பற்றி குறிப்பிட்ட போதும் இதற்கு மாறாக ஒவ்வொறு காரியமும் பயணிப்பதாக கூறுகிறது. (அதை பிறகு பார்போம்)

மேலே கூறப்பட்ட மூன்று வசனங்களும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகத்தில் பயணிக்கும் வெவ்வேறு பொருள்களை அல்லது செய்திகளை பற்றி விளக்குகிறது.

முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டியது, பிரயாணத்தின் போது கால மாறுதல்கள் ஏற்படும் என்ற சென்ற நூற்றாண்டில் கண்டறிந்த உண்மையை முஹம்மது நபி எவ்வாறு கூறி இருக்க முடியும்இதை பற்றி நாத்திக வாதிகள் கூறும்போது அல்லாஹ்வின் நாள் என்பது பெரியது என்று கூறி மக்களை ஏமாற்றவே முஹம்மது நபி அவ்வாறு கூறியதாக கூறுகின்றனர், இதை பார்க்கும் போது வசனங்களையும், சார்பியல் கொள்கை பற்றியும் எதையும் தெரியாமல் உளறுகின்றனர் என்றே கூறலாம்.

ஏனெனில் இதே கருத்து குர்ஆனில் சில வசனங்களில் தெளிவான முறையில் அமைந்துள்ளது. மேலும் எதை வைத்து ஆயிரம், ஐம்பதாயிரம் என்ற அளவுகள் கூறி இருக்க முடியும், இரண்டு அளவுகளும் சரியான எப்படி அமைய முடியும். எப்படி சரியாக அமைகிறது என்று வரும் விளக்கங்களில் பார்க்கலாம்.

சார்பியல் விதிப்படி ஒளியின் வேகமே பிரபஞ்சத்தில் அதிக பட்ச வேகம், எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்திலோ அல்லது அதைவிட வேகமாகவோ செல்ல முடியாது, ஒளியின் வேகத்தில் ஒன்று பயணிப்பதாக இருந்தால் அதற்கு காலம் என்பது நின்று விடும். இன்று வரை எவ்வளவோ முயற்சி செய்தும் ஒளியின் 99.9999.. % அளவிற்கு நுண்ணிய அணுக்களை (Sub Elementary Particles)அனுப்பினாலும் ஒளியின் வேகத்தை தொடமுடியவில்லை. அதற்கு ஒரு தடையும் (Barrier) உள்ளது. அப்படியும் ஒளியை மிஞ்சிய வேகத்தில் ஒன்று பயணித்தால் (ஒரு வாதத்திற்கு மட்டும்) அதற்கு இயற்கை விதிகள் முற்றிலும் மாறுபடும்.

ஆக பயனிக்கவோ, செய்திகளை அனுப்பவோ அதிகபட்ச வேகம் 99.999999……%C (ஒளி வேகம்). குர்ஆன் வசனங்களில் மனிதன் அந்த வேகத்தில் சென்றதாக குறிப்பிடவில்லை, அதற்கு மாறாக செய்திகளும், வானவர்களும் பயணித்ததாக குறிப்பிடுகிறது.

22:47 வசனத்தில் வேதனைகள் வருவதற்கான செய்திகளை பற்றி குறிப்பிடுகிறது, தற்போதைய அறிவியலே அதற்கு நேரிடையாக அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது என்ற அறிந்த நிலையில் அதை பற்றிய விளக்கம் தேவை இல்லை. 

அடுத்த வசனமாக 70:4 மலக்குகள் அந்த வேகத்தில் சென்றதாக கூறுகிறது, மலக்குகளுக்கு மட்டும் அந்த வேகத்தில் பயணிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்,வானவர்கள் என்பவர்கள் ஒளியால் படைக்க பட்டவர்கள் என்று     கூறியதால், ஒளியால் உருவான ஒன்று ஒளி வேகத்தில் செல்வது என்பது அதிசயமான ஒன்று அல்ல.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.  அறிவிப்பவர் : ஆயிஷா(ர­)

நூல் : முஸ்லிம் (5314)

சரி அது என்ன ஒரு நாள் என்பது ஆயிரம், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று கூறுகிறது, அதற்குதான் Lorentz transformationவருகிறது. இயற்பியல் விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், ஜோசப் லார்மேர் மற்றும் ஹென்றிக் லாரன்ஸ் ஆகியோர் கால மாறுதல்களுக்கு அளவை அறிய lorentz factor  என்ற ஒரு சூத்திரத்தை வெளியிட்டனர். இயக்கத்தில் உள்ள பொருளுக்கும் நிலையாக உள்ள பொருளுக்கும் இடையே உள்ள கால மாறுதல்களை (Time Dilation) அதன் திசை வேகத்தை வைத்து கணக்கிடகூடிய ஒரு சூத்திரத்தை பயன்படுத்தினர், அது loretz factor என்று அழைக்கப்படுகிறது. இதை கொடுக்கப்பட்ட இறை வசனங்களுக்கு பொருத்தி பாப்போம்.

                   
            Δt’- நாம் கணக்கிட கூடிய கால அளவு (நிலையாக உள்ள பொருள்)
            Δt  - நகரும் பொருளின் காலம்
             V   - திசைவேகம் (நகரும் பொருளின் வேகம்)
             C   - ஒளியின் வேகம் (299,792,458 மீட்டர்/செகண்ட் = 1C) 

உதாரணமாக நகரும் பொருளின் காலம் நாள் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், அதன் திசை வேகத்தையும் ஒளியின் வேகத்தையும் வைத்து மேற்கண்ட சமன்பாட்டை செய்தால் பூமியில் நிலையாக உள்ளவரின் காலம் வந்துவிடும்.

                                 Δt’= 1/ (1-(299792457.9988748489258802)2 / (299792458) 2)1/2

சமன்பாடுகள் செய்ய கடினமாக இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று Input கொடுத்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

Time dilation:

பொதுவாக அரை மடங்கு (.5C) ஒளியின் வேகத்தில் செல்லும் பொருளுக்கும் கூட கால மாறுதல்கள் தோராயமாக ஒன்றரை மடங்காக இருக்கும், அதுவே ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க அதன் கால மாறுதல்கள் வேகமாக அதிகரித்து, ஒரு பொருள் ஒளியின் வேகத்தை அடைந்து விட்டால், அந்த பொருளுக்கு காலம் என்பதே நின்று விடுகிறது. கீழே உள்ள படத்தில் மாற்றங்களை காணலாம்.

                                                   
ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்கிற போது, ஆண்டுகளையும் முதலில் நாட்கணக்கில் கொண்டுவருவோம்.
       
        1000 ஆண்டுகள் = 365000 நாட்கள்
        T என்பதில் 365000 என்பதை இட 

பிரயாணத்தின் போது ஒரு நாள் என்பது,  0.9999999999962469 என்ற ஒளி வேகத்தில் பயணித்தால் பூமியில் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு (365000~ நாட்கள்) சமமாக இருக்கும் என்பது உறுதியாகிறது.

ஆயிரம் ஐம்பதாயிரம் என்று இருவேறு மாதிரி வசனங்கள் கூறுவதால், குறிப்பிடப்பட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்பது கவனிக்கத்தக்கது,  0.9999999999962469 C என்ற ஒளி வேகத்தில் பயணித்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமாகும் என்கிறபோது, அதைவிட ஐம்பது மடங்கு அதிகமாக காலம் மாறுகிறது எனில் ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணித்தால் மட்டுமே சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம், அதுதான் இல்லை. வெறும் சில மில்லிமீட்டர் அளவு வேகத்தை அதிகபடுத்த அதன் கால மாறுபாடு ஐம்பதாயிரம் என்று ஆகிறது.

        50000 ஆண்டுகள் = 18250000  நாட்கள்
        T என்பதில் 18250000  என்பதை இட 

பிரயாணத்தின் போது ஒரு நாள் என்பது வெறும் சில மில்லிமீட்டர் வேகத்தை அதிகரித்து அதாவது 0.9999999999999984 C  என்கிற வேகத்தில் பயணித்தால் போதும், அது பூமியில் கணக்கிடகூடிய ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்பதையும் அறிய முடியும். மேலே குறிப்பிட்ட இணையத்தில் சென்று நாட்களையும் வேகத்தையும் சரியாக அளந்து கொள்ளலாம்.

ஆக தற்போதைய அறிவியலின் படி ஒரு ஒளி அல்லது ஒளியின் ஆன்மா ஒளிக்கு இணையான 99.999...% வேகத்தில் செல்வது சாத்தியமே, 99.999… அந்த வேகத்தில் செல்ல முடியும் என்பதை இறை வேதம் பறைசாற்றுகிறது என்பதை ஒப்போகொள்கிரீர்களா என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

நாம் கூறாமல் விட்ட மற்றொரு வசனமான 32:5 ல் ஒரு நாள் அனைத்து பொருள்களும் முடிவில் அவனிடத்தில் திரும்ப செல்லும் என்றும் செல்லக்கூடிய (நகரும் பொருளின்) அந்த நாளின் அளவு ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையாக இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றான்.

அனைத்து பொருள்களும் என்று இவ்வசனத்தில் குறிப்பிடபட்டுள்ளது, அனைத்து பொருள்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையான அளவுள்ள வேகத்தில் பயணிக்க போவதாக குறிப்பிடுவது விசித்திரமாக இருக்கிறது என்று சிந்திக்கிறீர்களா... அதை பற்றியும் பார்க்கலாம்.

பிரபஞ்ச உருவாக்கத்தை பற்றி விவரிக்கும் பிக் பாங் கொள்கை, பிரபஞ்சம் உருவாகும் பொது அது விரிவடையும் விகிதம் ஒளியின் வேகத்தை விட அதிகமாகவோ அல்லது அதற்கு இணையான வேகத்திலோதான் விரிவடைந்த தாக கூறுகிறது. சார்பியல் விதிகளுக்கு எதிராக இருக்கிறதே என்று என்ன வேண்டாம், பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் தான் ஒளி வேகத்தில் செல்லாது ஆனால் வெளியோ ஒளி வேகத்தில் விரிவடையும் என்கின்றனர் அறிவியலாளர்கள். வெளி விரிவடைவது உறுதியும் செய்யப்பட்டுள்ளது. இதை எட்வின் ஹப்ல் (Edwin hubble)என்ற விஞ்ஞானி டோப்ளர் எபக்ட்(Doppler Effect) மூலம் விளக்கினார்.

அதே போல விரிவடைந்த பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதன் வேகத்தை குறைத்து விரிவடையும் உச்சத்தை அடையும், பிறகு மீண்டும் அதே அழுத்தத்துடன் சுருங்க ஆரம்பிக்கும், விரிவடைந்த அதே வேகத்தில் தான் சுருங்கும், இதை விவருக்கும் விதமாக உள்ளதே பிக் ரிப், பிக் கிரன்ச் ஆகிய கொள்கைகள், அதாவது குர்ஆன் கூறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணை என்கிறபோது அது ஒளியின் 99.999... %C என்ற வேகத்தில் சுருங்கும்.


(Its expansion will slow down until it reaches a maximum size. Then it will recoil, collapsing back on itself. As it does, the universe will become denser and hotter until it ends in an infinitely hot, infinitely dense singularity.

இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையான அந்த நாள் என்பது வேகத்தையே குறிக்கிறது, அதை பற்றி விவரிக்கும் குர்ஆன் வசனமே இது.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.


                                                          தொடரும்....
- உங்கள் தோழன் 

References: 

http://webs.morningside.edu/slaven/Physics/relativity/relativity6.html
http://en.wikipedia.org/wiki/Big_Bang
http://ihsasonline.blogspot.com/2011/03/12.html
http://www.onlinepj.com/Test/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/293/
http://senkodi.wordpress.com/2010/08/03/time-space/
http://senkodi.wordpress.com/2010/01/13/about-sky/
http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=451:2009-01-26-03-53-15&catid=37:2008-07-26-14-12-36&Itemid=58
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
http://www.tamilquran.in/t293.php
http://en.wikipedia.org/wiki/Big_Rip
http://iraiadimai.blogspot.com/2010/07/blog-post_11.html
நன்றி பிரதர் கார்பன்.

உங்கள் நண்பன் 
ரஹ்மான்....